சேலம் மாவட்டத்தில் உள்ள வேம்படி தாளம் பகுதியில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் நான் ஜவுளி உற்பத்தி நிறுவனம் நடத்தி வருகிறேன். கடந்த 2017-ஆம் ஆண்டு கொண்டலாம்பட்டியில் வசிக்கும் அருண்-சுதா தம்பதியினர் 36 லட்சத்து 27 ஆயிரத்து 672 ரூபாய்க்கு துணிகளை வாங்கினர்.

அவர்கள் 98 ஆயிரம் ரூபாய் பணத்தை மட்டும் கொடுத்தனர். மீதமுள்ள 35 லட்சத்து 29 ஆயிரத்து 672 ரூபாய் பணத்தை தரவில்லை. இதுகுறித்து பலமுறை கேட்டும் அவர்கள் காலம் தாழ்த்தி வருகின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை வாங்கி தர வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.