மதுரையில் வருகின்றமே நான்காம் தேதி அதிகாலை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளதால் மதுரை மாவட்டத்தில் மே 4 ஆம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சித்திரை திருவிழா வருகின்ற மே ஐந்தாம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் வைகை நதியில் இறங்கும் வைபவமும் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள். இந்த விழாவுக்கான சிறப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.