கரூர் மாவட்டத்திலுள்ள தோகைமலை அருகே நல்லா கவுண்டன் பட்டி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள சிறுவர் சிறுமியர் ஒன்றாக சேர்ந்து நேற்று மதியம் 15 பாக்கெட் நூடுல்ஸ் வாங்கி சமைத்துள்ளனர். அவர்கள் ஒரு தோட்டத்தில் வைத்து நூடுல்ஸ் சமைத்துக் கொண்டிருந்தபோது திடீரென எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனால் அருகே இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எண்ணெய என நினைத்து நூடுல்ஸில் ஊற்றி சாப்பிட்டுள்ளனர். இந்த பூச்சிக்கொல்லி மருந்து கலந்த நூடுல்ஸ் சாப்பிட்ட 15 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.