கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடவள்ளி பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமியின் தந்தை இறந்து விட்டார். இதனால் சிறுமியின் தாய் பெயிண்டரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் மனைவி வெளியே சென்ற நேரத்தில் பெயிண்டர் தனது வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்து கதறி அழுதார். இதுதொடர்பாக சிறுமியின் தாய் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் பெயிண்டரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தாயிடம் கதறி அழுத சிறுமி…. வளர்ப்பு தந்தை செய்த காரியம்…. போலீஸ் அதிரடி…!!
Related Posts
அரசு மருத்துவமனை கழிவறையில் மருத்துவர் திடீர் மரணம்… அதிர்ச்சி சம்பவம்…!!!
செங்கல்பட்டு மாவட்டம் ஓணம் பாக்கம் அருகே உள்ள கீழ்கருணை என்ற கிராமத்தை சேர்ந்த அருணகிரி (33) என்ற மருத்துவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு டாக்டர் நந்தினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் வின்சென்ட் பகுதியில் குடியிருந்து வந்த நிலையில்…
Read more“சுட்டெரிக்கும் வெயிலால் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்”… அதிர்ச்சியில் உரிமையாளர்…!!!
திருச்சி மாவட்டத்தில் உள்ள இடையப்பட்டி பகுதியில் நாகராஜ் (45) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் இன்று காலை வேலைக்கு செல்வதற்காக தன்னுடைய காரை எடுத்துள்ளார். அப்போது திடீரென காரின் முன்…
Read more