கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடவள்ளி பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமியின் தந்தை இறந்து விட்டார். இதனால் சிறுமியின் தாய் பெயிண்டரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் மனைவி வெளியே சென்ற நேரத்தில் பெயிண்டர் தனது வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்து கதறி அழுதார். இதுதொடர்பாக சிறுமியின் தாய் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் பெயிண்டரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.