புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமுவின் தபேதாராக அன்பழகன் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அன்பழகன் பணி ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் கலெக்டரின் முகாம் அலுவலகத்தில் வைத்து அன்பழகனுக்கு கலெக்டர் கவிதா ராமு சால்வை, சந்தன மாலை அணிவித்து கௌரவித்தார். இதனையடுத்து அன்பழகனை கலெக்டர் தனது காரில் வீட்டிற்கு வழி அனுப்பி வைத்து கௌரவித்தார். பின்னர் கலெக்டர் கவிதா ராமு அன்பழகனின் வீட்டிற்கு சென்று பரிசு பொருட்களை வழங்கி விருந்தில் கலந்து கொண்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிகழ்வு பொதுமக்களிடம் பாராட்டையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.
பணி ஓய்வு பெற்ற தபேதார்…. தனது காரில் வழியனுப்பி கௌரவித்த கலெக்டர்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!
Related Posts
இணைபிரியா நண்பன் செய்த துரோகம்…. கண்முன்னே கண்ட காரியம்…. கடைசியில் நேர்ந்த கொடூரம்…!!
திருப்பத்துார் மாவட்டத்தை சேர்ந்தவர் காளிதாஸ் (32) ஓசூரில் கட்டிட மேஸ்திரியாக உள்ளார். இவரது நண்பர் சரவணன் (35). இருவரும் இணைபிரியா நண்பர்களாக இருந்துள்ளனர். இந்நிலையில் காளிதாஸின் மனைவி ரேவதிக்கும் சரவணனுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த காளிதாஸ் அவர்களை எச்சரித்துள்ளார். மேலும் சரவணனின்…
Read more“யூடியூபில் வீடியோ”… வங்கியில் திருடுவது எப்படி…? பிளான் போட்ட எம்பிஏ பட்டதாரி…. தட்டித் தூக்கிய போலீஸ்….!!!
மதுரை மாவட்டத்திலுள்ள ஆரியப்பட்டி கிராமத்தில் லெனின் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் எம்பிஏ முடித்து விட்டு சென்னையில் உள்ள ஒரு வங்கியில் வேலை பார்த்து வந்த நிலையில் ஊதியம் போதாததால் வேலையை விட்டு நின்றார். அதன் பிறகு சொந்த ஊருக்கு…
Read more