மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பாலை சரஸ்வதி நகரில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் மருந்து மொத்த விற்பனை நிலையம் வைத்துள்ளார். இந்நிலையில் சக்திவேலிடம் கலையரசன் என்பவர் 8 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மருந்து பொருட்களை வாங்கி அதற்கான பணத்தை தவணை முறையில் தருவதாக கூறியுள்ளார்.

ஆனால் அதற்கான பணத்தை கொடுக்காமல் கலையரசன் மோசடி செய்து விட்டார். இதுகுறித்து சக்திவேல் திலகர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.