நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரவேனு சாலையில் இருக்கும் பெரியார் நகர் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கிறது. நேற்று அதிகாலை 4 மணிக்கு குடியிருப்பை ஒட்டி இருக்கும் சாலையில் சிறுத்தை நடந்து சென்று தேயிலை தோட்டத்திற்குள் புகுந்து மறைந்தது. இந்த காட்சிகள் ஒரு வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது. இதுகுறித்த தகவல் வேகமாக பரவியதால் குடியிருப்பு வாசிகள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

கடந்த அக்டோபர் மாதம் 2 சிறுத்தைகள் மற்றும் 2 கருஞ்சிறுத்தைகள் இந்த பகுதியில் உள்ள வந்தது குறிப்பிடத்தக்கதாகும். எனவே அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு வனத்துறையினர் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து அதை அடர்ந்த வனப்பகுதிகள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.