பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரியம்மாபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் செல்வகுமார்(33) என்பவர் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதன் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் நல குழுமத்தினர் பள்ளி மாணவிகளிடம் விசாரணை நடத்தியதில் செல்வகுமார் பாலியல் தொந்தரவு அளித்தது உறுதியானது. இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் செல்வகுமாரை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.