புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குளத்தூர் நாயக்கர்பட்டி கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவிகள் மருங்குளம் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாணவிகள் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் படியில் நின்று கொண்டிருந்த மாணவிகளை கண்டக்டர் சுப்ரமணியன் தகாத வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த பள்ளி மாணவிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைந்து போக செய்தனர். இந்த பிரச்சனை தொடர்பாக புதுக்கோட்டை மண்டல போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரணை நடத்தி சுப்பிரமணியனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தனர். இதனையடுத்து பணியிடை நீக்கம் காலம் முடிந்ததும் சுப்பிரமணியனை பணியிட மாற்றம் செய்யவும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.