சிவகங்கையில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். இந்த கோரிக்கை மனுக்கள் மீது விசாரணை நடத்தி தகுதியுடைய மனுக்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டுள்ளார்.