சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருபுவனம் தேர்வு நிலை பேரூராட்சியில் உள்ள தேரடி முதல் போலீஸ் லயன் தெரு மதுரை மண்டபம் சேலம் சாலை வரை பேவர் பிளாக் அமைக்க ஜி.கே வாசன் தனது வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.40 லட்சம் வழங்கினார். இந்நிலையில் நிதிக்கான நிர்வாக அனுமதி மற்றும் தொழில்நுட்ப அனுமதி  வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அந்த பணிக்கு டெண்டர் விடாமல் காலம் கடத்தும் பேரூராட்சி செயல் அலுவலரை கண்டித்து ஐந்தாவது வார்டு கவுன்சில் பாரத் ராஜா  பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஆனால் செயல் அலுவலர் சிவகங்கைக்கு சென்றுள்ளதாக கூறியுள்ளனர். உடனடியாக செயல் அலுவலர் இங்கு வரவேண்டும் எனக் கூறி அவர் இரண்டு மணி நேரம் உள்ளிருப்பு  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் பின் செயல் அலுவலருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளார். இது குறித்து பேரூராட்சியின் செயல் அலுவலர் ஜெயராஜ் கூறியதாவது, பேரூராட்சியின் மூலம் ஒப்பந்த புள்ளி கோரி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.