புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இலுப்பூர் கரடிகாடு அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 4 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் பிரபாகரன், மதியழகன், வசந்தகுமார், சதீஷ்குமார் என்பது தெரியவந்தது.

அவர்கள் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் 4 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 1 கிலோ 150 கிராம் கஞ்சா, 4 செல்போன்கள், கம்ப்யூட்டர் எடை மெஷின் 10,800 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.