திருச்சி மாநகராட்சியில் உள்ள கம்பரசம் பேட்டை அய்யாளம்மன் பரிந்துறை அருகே புதிதாக 5 கோடி மதிப்பில் பல தட்டுகள் கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இதனை அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இதன்பின் அவர் கட்டித் தரப்பட்ட பல்வேறு நல திட்டங்கள் குறித்து பேசினார். இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கு முதல் கட்டமாக 380 கோடி நிதி ஒதுக்கினார்.

இதில் அடுத்த கட்டமாக 450 கோடிக்கு புதிய மார்க்கெட் வளாகம், வணிக வளாகங்கள் என பல்வேறு பணிகள் நடைபெற இருக்கின்றது. இதன் மூலம் திருச்சி மாநகராட்சிக்கு வருவாய் அதிகரிக்கும். மேலும் பஞ்சப்பூரில் முதல்வர் அறிவித்த ஒலிம்பிக் விளையாட்டு திடல் 200 ஏக்கரில் அமைய இருப்பதாக தெரிவித்தார்.