கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோடி புதூர் பகுதியில் பிரியதர்ஷினி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு பிரியதர்ஷினிக்கு லட்சுமணன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த பிரியதர்ஷினி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த லட்சுமணனும் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றார். அதற்குள் அக்கம் பக்கத்தினர் லட்சுமணனை மீட்டு கிருஷ்ணகிரியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் போலீசார் பிரியதர்ஷினியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.