திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மூளைக்கரைப்பட்டி வடக்கு தெருவில் கார்த்திக் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 4 மாதத்திற்கு முன்பு குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோபத்தில் கார்த்திக் முகம் பார்க்கும் கண்ணாடியில் கையை ஓங்கி குத்திக்கொண்டார். இதனால் கையில் காயம் ஏற்பட்டு கார்த்திக்கால் வேலைக்கு செல்ல முடியவில்லை.

இதனால் வாழ்க்கையை வெறுத்த கார்த்திக் நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கார்த்திக்கின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.