திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேல தாலையூர் வடக்கு பள்ளிவாசல் தெருவில் அசன்(29) என்பவர் வசித்து வருகிறார். நேற்று இரவு அசன் தனது நண்பரான ஜியா(31) என்பவருடன் காரில் நெல்லை சந்திப்பு நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் உடையார்பட்டி குளம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி உடையார்பட்டி குளத்திற்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த இரண்டு பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். பின்னர் அவர்கள் கண்ணாடியை உடைத்து கொண்டு பத்திரமாக வெளியே வந்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.