திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி முகைதீன் பள்ளி நடு தெருவில் ஜீனைதா என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார் .கடந்த 9 ஆண்டுகளாக ஜீனைதா அதே பகுதியைச் சேர்ந்த சித்திக் என்பவருடன் குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு அளித்துள்ளார்.

இதனால் ஜீனைதா சித்திக்கை விட்டு பிரிந்து விட்டார். நேற்று சித்திக் ஜீனைதாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை தகாத வார்த்தையால் திட்டி தாக்கியுள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.