நீலகிரி மாவட்டத்திலுள்ள ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணை உதகை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 48 பேரிடம் இதுவரை விசாரணை நடத்தியுள்ளனர். இந்த வழக்கின் விசாரணை உதகை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வந்த போது அரசு தரப்பில் 48 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதைக் கேட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை பிப்ரவரி 24-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.