ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளர்கள் தனித்தனியாக அறிவிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு தனித்தனியாக வேட்பாளர்களை அறிவிக்கும் பட்சத்தில் இரட்டை இலை சின்னம் முடங்கப்படும்.

இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்குமாறு கூறி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளார். அதன்பிறகு இடைக்கால பொதுச் செயலாளர் என்ற அடிப்படையில் தன்னுடைய கையெழுத்தை தேர்தல் ஆணையம் ஏற்க மறுப்பதாகவும் உச்ச நீதிமன்றத்தில் இபிஎஸ் புகார் தெரிவித்துள்ளார். மேலும் உச்சநீதிமன்றத்தில் ஜனவரி 30-ஆம் தேதி இபிஎஸ் புகாரை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.