தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பு ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைகடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை நடைபெற்றது. இதனால் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு பாடங்களை வருகின்ற மே 1-ம் தேதிக்குள் முழுமையாக நிறைவு செய்ய கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கல்லூரி முதல்வர்களுக்கும் கல்வி இயக்குநர் ஈஸ்வரமூர்த்தி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், “முதலாம் ஆண்டு மாணாக்கர் சேர்க்கை 18.11.2022ல் நடத்தப்பட்டது. அவர்களுக்கான பாடத்திட்டத்தை 1.5.2023க்குள் முடிக்க வேண்டும் என்பதால், இது ஆசிரியர்களுக்கு கடினமாக இருக்கும். இதனால் தேவைப்பட்டால் அனைத்து சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்திக் கொள்ளும்படி” குறிப்பிடப்பட்டுள்ளது.