தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அடுத்த இரு நாட்களுக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்கரையை நெருங்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது.