சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களை தக்கவைத்துள்ள மற்றும் விடுவித்த வீரர்கள் பட்டியல் :

ஐபிஎல் 2024க்கான மினி ஏலம் டிசம்பர் 19-ம் தேதி துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் நடைபெற உள்ளது. எனவே இன்றைக்குள் ஒவ்வொரு அணியும் தக்கவைத்துள்ள வீரர்கள் மற்றும் விடுவிக்கப்ட்டுள்ள வீரர்கள் பட்டியலை வெளியிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் ஏலத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ள, தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் முழுமையான பட்டியலை வெளியிட்டுள்ளது. ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 32.1 கோடி ரூபாய் பர்ஸ் பாக்கி உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களை விடுவித்தது :

பென் ஸ்டோக்ஸ், டுவைன் பிரிட்டோரியஸ், பகத் வர்மா, சுப்ரான்ஷு சேனாபதி, அம்பதி ராயுடு, கைல் ஜேமிசன், ஆகாஷ் சிங், சிசண்டா மகலா.

சென்னை சூப்பர் கிங்ஸ் தக்கவைத்த வீரர்கள் :

எம்.எஸ் தோனி (கேப்டன் &வி.கீ), மொயின் அலி, தீபக் சாஹர், டெவோன் கான்வே (வி.கீ), துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா, அஜய் மண்டல், முகேஷ் சவுத்ரி, மதீஷா பத்திரனா, அஜிங்க்யா ரஹானே, ஷேக் ரஷீத், மிட்செல் சான்ட்னர், சிமர்ஜீத் சிங், நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா.