கர்நாடக மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. சட்டசபை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சித்த ராமையா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தற்போது நடைபெறும் சட்டசபை தேர்தல்தான் என்னுடைய கடைசி தேர்தல்.

இந்த தேர்தலுக்கு பிறகு நான் என் போட்டியிட மாட்டேன். அதன் பிறகு எந்த ஒரு புதிய பதவியையும் ஏற்க மாட்டேன். ஆனால் அரசியலில் நான் தொடர்ந்து இயங்குவேன் என்று கூறினார். மேலும் இதற்கு முன்னதாக ஒரு பேட்டியில் ஆட்சிக்கு வந்த பிறகு என்னால் மக்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டால் நான் உடனடியாக பதவி விலகி விடுவேன் என சித்த ராமையா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.