இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பரவல் தொற்று அதிகரித்து வருகிறது. தினசரி 6000 என்ற அளவில் பாதிப்பு இருந்த நிலையில் நேற்று சற்று குறைந்தது. அதன்படி நேற்று கொரோனா பாதிப்பு 5357 என்ற அளவில் பதிவான நிலையில் இன்று சற்று உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் என்று 5880 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,47,56,616 இல் இருந்து 4,47,62,496 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 3,481 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.