மத்தியில் ஆளும் பாஜக அரசு தன்னுடைய கார்ப்பரேட் நண்பர்களுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி செய்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது, மதச்சார்பு அரசியல், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் போன்ற செயல்கள் மூலம் பாஜக கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவது நன்றாக தெரிய வருகிறது. மேலும் பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வேண்டுமென்றே பிரச்சனைகளை உருவாக்குகிறார்கள் எனவும் விமர்சித்தார்.