அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டுமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மீது அரசு முக்கிய முடிவு எடுத்திருக்கிறது. ஊழியர்களின் ஓய்வூதிய முறையை மறு ஆய்வு செய்வதற்கு நிதியமைச்சகம் ஒரு குழுவை அமைத்து உள்ளது. அரசு ஊழியர்களுக்கு பொருந்தும் ஓய்வூதியம் திட்டத்தின் தற்போதுள்ள கட்டமைப்பில் எதாவது மாற்றம் தேவையா இல்லையா என்பதை இக்குழுவானது பரிந்துரைக்கும்.

இந்நிலையில் NPSன் கீழ் உள்ள ஊழியர்களின் ஓய்வூதியப் பலன்களை மேம்படுத்தும் நோக்கில் அதனை திருத்துவது குறித்த ஆலோசனைகளை இந்த குழு வழங்கும். இதற்கிடையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த அறிவிப்பை பாஜக அல்லாத மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுக்க வேண்டும். மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை திரும்பப் பெறுவதற்கான முடிவை மத்திய அரசிடம் ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் தெரிவித்துள்ளது. இம்மாநிலங்கள் NPS-ன் கீழ் வசூலிக்கப்பட்ட நிதியை திரும்ப அளிக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துத்துள்ளனர்.