நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  விஜயின் அரசியல் கட்சியுடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு,  இந்த கேள்வியே நீங்க என்கிட்ட கேட்க கூடாது.. தம்பி கிட்ட தான் கேட்கணும்.. அவரே எனக்கு பின்னாடி வராரு.. நான் அவரு கோட்பாட வைத்து ரொம்ப தூரம் பயணிச்சிட்டேன்.. அவர் புதிதாக ஒரு தத்துவத்தை முன்வைக்கிறார்.

அவர் முன்வைக்கிற கோட்பாடும், நாங்க முன்வைத்து பயணிக்கிற கோட்பாடும் ஏற்புடையதா இருந்தா.. அவர் தான் முடிவு பண்ணனும்.. இல்ல நம்ம தனித்து நிற்கலாம் என அவர்தான் முடிவு பண்ணணும்.. அவரும், அவர் தொண்டர்கள் தான் முடிவு பண்ணனும். நாம வந்து நம்ம சேர்ந்து அப்படின்னு சொல்ல முடியாது.. அது காலம் ஒத்து வரணும்.. சூழல் அமையனும்.

அது அவர் விரும்பனும்.. அவர் தொண்டர்கள் விரும்பனும். அப்பதான் அதை பத்தி பேச முடியும்.. இப்ப  நான் சொல்றேன் தனிச்சு போட்டிடுறேன். நீண்ட தூரம் தனிச்சு போட்டியிட்டு தான் நாங்க வந்திருக்கோம். அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்.. அதை நீங்க வந்து தம்பி கிட்ட தான் கேட்கணும் அவர் கட்சி ஆரம்பித்து அவர் வந்து பேசும்போது, அவர்கிட்ட கேளுங்க..

நீங்க தனிச்சு போட்டியிடுவீங்களா? கூட்டணி வைப்பீங்களா? நீங்க அண்ணனோட சேர்ந்து நிப்பீங்களான்னு கேளுங்க.. என்கிட்ட கேட்டுகிட்டு இருக்கீங்க.. நான் என்ன பதில் சொல்றது.. 24 (2024) தேர்தலில் நான் தனிச்சு போட்டியிடுறேன். வேட்பாளர் அறிவித்துக் கொண்டு வருகிறேன். அதுதான் உண்மை அதுதான் நடக்க போகுது” என தெரிவித்தார்.