செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான்,  என்னுடையய கை 15 வருடத்திற்கு முன்னாடி இரண்டாக உடைந்து விட்டது. கொஞ்சம் நகருகின்றது… லைட்டா விலகிடுச்சி… அதற்காக இந்த இரண்டு நாளாக ட்ரீட்மென்ட் எடுக்க ஒரு இடம் போய்ட்டேன்….   வீட்டில் இருந்து போன் பார்த்தால்…  ஆயிரகணக்கில்….  லட்சக்கணக்கில்…. எல்லா லாங்குவேஜ்யில்….  அந்த பொண்ணு  திரிஷா,  அவர் கூட நடிப்பதை நான் வெறுக்கிறேன்.

இனி நடிப்பதை என் வாழ்க்கையில் செய்ய மாட்டேன் என்று சொல்லிவிட்டு…. பக்கத்தில் பக்கத்தில் பொண்ணு,  மாப்பிள்ளை மாதிரியே எல்லா பேப்பரிலும் பொட்டுட்டு இருக்காங்க…  கொஞ்சம் என் போட்டோ நல்லதா போட்டு இருக்க கூடாதா ? கொஞ்சம்  தேடி எடுத்து…. ஆனால் சில போட்டோவில் அந்த அம்மாவை விட நான் நல்லா தான்  இருக்கிறேன.  நல்ல நிறைய போன்ல பார்த்தேன்…

எல்லா மொழி பத்திரிக்கையிலும் வந்துட்டு…. இங்கிலீஷ்,  ஹாலிவுட் வரைக்கும் போய்விட்டது. அந்த விதத்தில் எனக்கு ரொம்ப சந்தோஷம்தான்.  பாவம் சேர்ந்து நடிக்க மாட்டேன்னு சொல்லி விட்டார்கள்…நடிகர் சங்கம் பண்ணது இமாலய தவறி. ஒரு அமைப்பில் இருக்கிறவர்கள் ஒரு விசாரணை  பண்ணிவிட்டு தான் சொல்லணும்.. நீங்க கேள்வி கேளுங்கள்… நான் அப்புறம் பதில் சொல்ல வருகிறேன் என தெரிவித்தார்.