தமிழகத்தில் நவம்பர் 23ஆம் தேதி இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது . வழக்கமாக சார் பதிவாளர் அலுவலகங்களில் நாள் ஒன்றுக்கு 100 டோக்கன்கள் வழங்கப்பட்டு பதிவு பணிகள் நடைபெறும் நிலையில் இன்று அதிக பதிவுகள் நடைபெறும் என்பதால் 150 டோக்கன்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் 12 க்கு பதிலாக 16 தட்கல் டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன.