கோயம்புத்தூரில் தனியார் அமைப்புகள் மூலம் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டி, மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று காலை நடந்த மாரத்தான் போட்டியில் மாவட்ட ஆட்சியர் சமீரன், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து அவர்கள் பொதுமக்களுடன் 10 கிலோமீட்டர் தூரம் முழுவதுமாக ஓடினர்.

இது தொடர்பாக மரத்தானில் ஓடிய விளையாட்டு வீரர்கள் கூறியதாவது, பொதுவாக போட்டிகளை தொடங்கி வைப்பதற்கு தான் மாவட்ட ஆட்சியர் கமிஷனர் போன்ற உயர் அதிகாரிகள் வருவார்கள். அவர்கள் சிறிது தூரம் ஓடிவிட்டு காரில் ஏறி சென்று விடுவார்கள். ஆனால் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோர் 10 கிலோமீட்டர் தூரமும் முழுமையாக ஓடி நிறைவு செய்தது விளையாட்டு வீரர்களுக்கு மகிழ்ச்சியும், புதிய உத்வேகத்தையும் அளித்துள்ளது என கூறியுள்ளனர்.