கரூர் மாவட்டத்தில் உள்ள தளிக்கோட்டை பகுதியில் விவசாயியான சிதம்பரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 50-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று 6 ஆடுகள் கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது. இதனால் சிறுத்தை புலி தான் ஆடுகளை கடித்து கொன்றதாக நினைத்து விவசாயிகளும், பொதுமக்களும் அச்சத்தில் இருந்தனர்.

இந்நிலையில் மருத்துவ குழுவினர் இறந்த ஆடுகளின் உடலை பரிசோதனை செய்ததில் வெறி நாய்கள் கடித்ததால் தான் ஆடுகள் இறந்தது தெரியவந்தது. இந்நிலையில் சிறுத்தை புலியை கண்ணால் பார்த்தால் மட்டுமே பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். வேறு ஏதாவது விலங்கை பார்த்துவிட்டு சிறுத்தை புலி என்று தகவல் சொன்னால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.