சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் பீகாரைச் சேர்ந்த கூலி தொழிலாளிகள் தங்கி கட்டிட வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் பீகாரை சேர்ந்த சுரஸ் பியாஸ் குமார் அவரது நண்பர்கள் இரண்டு பேர் என மூன்று பேர் கடைவீதிக்கு சென்றுள்ளனர். அப்போது திருப்பத்தூர் காண்பாநகர் பகுதியை  சேர்ந்த சிலம்பரசன், முருகன், கார்த்திக், தங்கப்பாண்டி உட்பட ஐந்து பேர் பியாஸ் குமாருடன் தகராறு செய்தது மட்டுமல்லாமல் அவர்கள் தங்கி இருந்த இடத்திற்கு சென்று அவர்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த பியாஸ் குமார் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து புகாரின் பேரில் போலீசார் ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து கார்த்திக், முருகன், தங்கபாண்டி, சிலம்பரசன் ஆகிய நான்கு பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.