பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில் கரூர் அரசு கலை கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் மாணவர்கள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.

இதில் சினேகா, சுபாஷ், தமிழ்ச்செல்வன் ஆகியோர் தங்க பதக்கமும், கவின் குமார், பாலகணேஷ் ஆகியோர் வெள்ளி பதக்கமும் பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்நிலையில் சாதனை படைத்த மாணவ- மாணவிகளை கல்லூரியின் முதல்வர், பேராசிரியர்கள் உட்பட பலர் பாராட்டியுள்ளனர்.