வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒடுகத்தூர் பேரூராட்சி அண்ணா நகர் பகுதியில் குமரகுரு என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்குள் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குமரகுரு திணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 5 அடி நீளம் உள்ள சாரை பாம்பை பிடித்தனர். அந்த பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து வனத்துறையினர் அந்த பாம்பை பரவமலை காப்பு காட்டில் கொண்டு விட்டனர்.