கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் மாவட்ட நியமன அலுவலர் வெங்கடேசன் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் சோதனை செய்ததில் காட்டேரி பகுதியில் இருக்கும் சகுந்தலா என்பவருக்கு சொந்தமான பெட்டி கடையில் குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது.

இதனால் அதிகாரிகள் அந்த கடையை பூட்டி சீல் வைத்தனர். இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 26 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குபதிவு செய்து போலீசார் சகுந்தலாவை கைது செய்து கடையிலிருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.