வேலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பங்குப்பம் பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பசு மற்றும் கன்று குட்டியை வளர்த்து வந்தார். நேற்று விக்னேஷ் மாடுகளை மேய்ச்சலுக்காக விவசாய நிலத்தில் கட்டி வைத்திருந்தார். அப்போது 70 அடி ஆழமுள்ள கிணற்றில் கன்றுக்குட்டி தவறி விழுந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த விக்னேஷ் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு கன்று குட்டியை பத்திரமாக மீட்டனர்.