திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் எஸ்பி கோவில் தெருவில் குட்டியம்மா என்பவர் வசித்து வருகிறார். இதற்கு கோகுல் என்ற மகன் இருந்துள்ளார். வெல்டரான கோகுல் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானர். நேற்று முன்தினம் இரவு மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த கோகுலை அவரது தாய் கண்டித்தார்.

இதனால் தாய்க்கும் மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த கோகுல் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோகுலின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.