தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மருத்துவ கல்லூரி சாலை அன்னை சாவித்திரி நகரில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். இந்நிலையில் தஞ்சை மூலிகை பண்ணை ரோட்டில் சென்றபோது சாலையின் குறுக்கே வந்த மாடு மீது மோதாமல் இருப்பதற்காக தமிழ்ச்செல்வன் மோட்டார் சைக்கிளை திருப்பி உள்ளார்.

அப்போது கட்டுப்பாட்டை இருந்த மோட்டார் சைக்கிள் காம்பவுண்டு சுவர் மீது மோதியது. இதனால் படுகாயமடைந்த தமிழ்செல்வனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் தமிழ்ச்செல்வன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.