தமிழகத்தில் முதல் மாவட்டமாக திருவாரூரில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதனைப் போலவே கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பல மாவட்டங்களிலும் விடுமுறை குறித்து அறிவித்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.