நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆனங்கூர் பகுதியில் ஆண்டவர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட ஆண்டவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை அழைத்து வருவதற்காக உறவினர் ஒருவர் காரில் மருத்துவமனைக்கு சென்றார். பின்னர் இரவு 10:30 மணிக்கு ஆண்டவரும் அவரது உறவினரும் காரில் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் பால் மார்க்கெட் அருகே சென்றபோது திடீரென கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் இருவரும் காரில் இருந்து கீழே இறங்கினர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் கார் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.