சென்னை பெரம்பூர் அதிமுக நிர்வாகி இளங்கோவன் கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சஞ்சய் என்பவருக்கும், இளங்கோவனுக்கும் இருந்த முன்பகை காரணமாகவே இந்த கொலை நடந்துள்ளது என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க ஸ்டாலின் பதிலளித்தார். தற்போது இந்த கொலை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியின் கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின் இந்த கொலை போதை விற்பனைக்கு எதிராக நடந்த கொலை என விசாரணையில் தெரியவில்லை. கொலை தொடர்பாக இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.