நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற ஒரு சிறந்த இடமாகும். ஊட்டிக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்கிறார்கள். தற்போது கோடை விடுமுறை வருவதால் ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்நிலையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 125-வது மலர் கண்காட்சி மே 19-ஆம் தேதி தொடங்கும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மலர் கண்காட்சி மே 19-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஊட்டியில் 18-வது ரோஜா கண்காட்சி மே 13-ஆம் தேதி முதல் மே 15-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குன்னூரில் 63-வது பழ கண்காட்சி மே 27-ம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறும். மேலும் கோத்தகிரியில் 12-வது காய்கறி கண்காட்சி மே மாதம் 6 மற்றும் 7 ஆகிய இரு தினங்களில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.