செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சிறுபான்மை மக்கள் வாழக்கூடிய சூழ்நிலை, அதுதான் முக்கியம். நிம்மதியாக வாழ வேண்டும். அமைதியான  வாழ்க்கை. யாருடைய ஆட்சிக் காலத்தில் இருந்தது. எங்க ஆட்சி காலத்தில் இருந்தது. எங்கு இஸ்லாமிய மக்களுக்கு ஏதாவது ஒரு சின்ன இன்னல்கள் இருந்ததா ? கிறிஸ்துவ மக்களுக்கு இன்னல் இருந்ததா ?   திமுக ஆட்சியில் இருந்தது.

அப்ப யார் உண்மையிலே திடீர் பாசத்தை காட்டுகிறார்கள்.  உள்ளத்து அளவில்  நஞ்சை வைத்துக்கொண்டு,  உதட்டளவில்  பார்த்தீர்கள் என்றால் தேனு ஒழுக பேசுவது திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு கைவந்த கலை. எனவே தான் இன்றைக்கு சிறுபான்மை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். தங்களுக்கு இழைக்கப்பட்ட துரோகத்திற்கு  திமுக தான் காரணம் என்று உணர்த்துள்ளார்கள்.

எனவே சிறுபான்மை மக்களுடைய ஒட்டுமொத்த ஆதரவு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பெருகுது. நாளுக்கு நாள் பெருகிக்குகின்ற வகையில் சிறுபான்மை மக்கள், கிறிஸ்தவ சமுதாய மக்கள்  எல்லாரும் வந்து ஆதரவு தரும்  நிலையில் DMK-வால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

பொறுத்துக் கொள்ள முடியாத நிலையில் இன்றைக்கு  இந்த கருத்தை அவர் சொல்லியிருக்கிறார். அதனால் ஆடி நனைகிறது என்று ரத்தம் குடித்த ஓநாய்கள்,  அழ வேண்டாம். கண்டிப்பாக இஸ்லாமிய மக்கள் தேர்தல் சரியான பாடத்தை திமுகவுக்கு புகட்டி, ஒட்டுமொத்தமான சிறுபான்மையின மக்களின் வாக்குகள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு கண்டிப்பாக கிடைக்கும் என தெரிவித்தார்.