திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற 29-ஆம் தேதி திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தோட்டக்கலைத் துறை, வேளாண்மை துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம், வங்கிகள், மின்வாரியம், வருவாய் நகராட்சி மற்றும் பொதுப்பணி உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். எனவே விவசாயிகள், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கூறியுள்ளார்.