தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் அபினேஷ் என்பவர் சிறுமியை காதலித்து வந்துள்ளார். கடந்த 19-ஆம் தேதி அபினேஷ் பேச வேண்டும் என கூறி சிறுமியை தனியாக அழைத்துச் சென்று தனது நண்பர்களான அரவிந்தன், ஸ்ரீகாந்த், ஸ்ரீதரன் ஆகியோருடன் சேர்ந்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். மேலும் அரவிந்தன் அதனை செல்போனில் வீடியோ எடுத்து தனது மற்றொரு நண்பரான ராகுல் என்பவருக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார்.

அந்த வீடியோவை ராகுல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இதுகுறித்து அறிந்த தஞ்சாவூர் குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவினர் பாபநாசம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சம்பந்தப்பட்ட 5  வாலிபர்களையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.