காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் தன்னார்வப் பயலும் வட்டம் மூலமாக குரூப் 4 போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது.

இந்த மாதம் 27-ஆம் தேதி முதல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட இருப்பதால் விருப்பம் இருப்பவர்கள் தங்களது புகைப்படம், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை நகல், ஆதார் அட்டை உள்ளிட்ட விவரங்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம். இதனையடுத்து கூடுதல் விவரங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண் 044-27237124 எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என கூறியுள்ளார்.