வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி ரயில் நிலைய பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த உதயகுமார், ஜெயக்குமார், ரஹீம் என்பது தெரியவந்தது.

அவர்கள் வைத்திருந்த பையில் 6 பண்டல்களில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆந்திர மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.