விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அய்யந்தோப்பு முருகன் கோவில் தெருவில் காளியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவண்ணாமலை- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தனது விவசாய நிலத்திற்கு நடந்து சென்றார். அப்போது சென்னை நோக்கி வேகமாக சென்ற கார் காளியம்மன் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த காளியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.