கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காடியார்கிராமத்தில் ராதாகிருஷ்ணன்- அன்னபூரணி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு சந்தோஷ் குமார் என்ற மகன் இருந்துள்ளார். அதே பகுதியில் இருக்கும் தங்களது நிலத்தில் ராதாகிருஷ்ணன், அன்னபூரணி, சந்தோஷ்குமார் ஆகிய மூன்று பேரும் உடல் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூன்று பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் பக்கத்து நிலத்தில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி மூன்று பேரும் இறந்தது தெரியவந்தது. இதனால் பக்கத்து நிலத்தின் உரிமையாளர் ராமமூர்த்தி என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.