திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் சிக்னல் அருகே சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் முடித்துவிட்டு ஆந்திரா நோக்கி சென்ற தனியார் பேருந்து நின்றது. திடீரென அந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து முன்னால் நின்று 2 கார்கள், 2 ஆட்டோக்கள், 2 இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. இந்த விபத்தில் 5-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். உடனே அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து நடந்ததும் தனியார் பேருந்தை  ஓட்டி வந்த டிரைவர்கள் தப்பி சென்றனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் தூக்க கலக்கத்தில் டிரைவர் பேருந்தை இயக்கியதே விபத்துக்கு காரணம் என்பது தெரியவந்தது.